உதயநிதி அழைப்பை ஏற்று... மீண்டும் தமிழகம் வரும் நரேந்திர மோடி..!! - Seithipunal
Seithipunal


விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பை ஏற்று சென்னையில் வரும் ஜனவரி 19ம் தேதி நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். அன்று மாலை திருப்பூரில் நடைபெறவுள்ள பாஜக நடத்தும் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

 பொதுக்கூட்டத்திற்காக பி.என் ரோடு, ஆண்டிபாளையம், பல்லடம் ஆகிய பகுதிகள் தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் முதல் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து வரும் 7ம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2ம் தேதி திருச்சி விமான நிலைய புதிய முனைய திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிலையில் இந்த மாதத்திலேயே மீண்டும் தமிழகம் வருகை தரவுள்ளதும், திருப்பூரில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதும் பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi will return to TamilNadu after Pongal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->