சொந்த கட்சியே என்னை வச்சு செஞ்சுடுச்சு.! முதல் முறையாக மனம் திறந்த முக ஸ்டாலின்.!!  - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் கடும் போட்டி நிலவும் என்றும், தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வண்ணமாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்களும், கணிப்புகளும் நமக்கு உணர்த்துகின்றன.

தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் அமைந்து உள்ள கூட்டணி அதிமுக-பாஜக-பாமக-இந்திய ஜனநாயக கட்சி இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் மேலும், தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது.

அதேபோல், திமுக அமைத்துள்ள கூட்டணியில், திமுக-காங்கிரஸ் மட்டுமே அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. மேலும் திமுகவின் தோழமை கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் அதாவது ஒருவர் ஒருவரை புகழ்ந்து (திட்டி) அரசியல் நடத்தும் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டன. இதனை முதலில் தொடங்கி வைத்த பெருமையை முக ஸ்டாலின் அவர்கள், அதிமுக கூட்டணி குறித்த தனது கருத்துக்களின் மூலம் ஆரம்பித்துள்ளார். அவரை தொடர்ந்து அவருக்கு எதிரான பதில் தாக்குதல் அரசியல் நிகழ்வுகள் நடந்து வர ஆரம்பித்துள்ளது.

இதில், தற்போது சமூக வலைத்தளங்களில் முக ஸ்டாலின் அவர்கள் பேசிய காணொளி ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, 

ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு ஆர் கே நகர் தொகுதியில் ஒரு இடைத்தேர்தல் நடைபெற்றது. 

அந்த இடைத்தேர்தலில் நாம் ஒரு பெரிய தோல்வியை சந்தித்தோம்.. 

டெபாசிட்டே போச்சு.. அது வேற...  

ஆக, அந்த தேர்தல்ல... ஒரு பூத்துல ஓட்டு எண்ணுறப்ப பாத்தா 11 ஓட்டு...

உதய சூரியனுக்கு.. திமுகவிற்கு..

அந்த 11 ஓட்டு விழுந்துருக்குற பூத்துல.. பூத்து கமிட்டி மெம்பர் எவ்வளவு தெரியுமா..? 

25 பேரு..

இது ஒரு பெரிய சாம்பிள்..

இது போல பல இடங்கள்ல..

ஆக இது அவங்கள ஏமாற்றத்து மட்டும் அல்ல... நம்ம ஏமாற்றுவது மட்டுமல்ல ஒட்டுமொத்த இயக்கத்தையும் ஏமாற்றும் சூழ்நிலை.. என்று முக ஸ்டாலின் வேதனையாக மனம் திறந்து பேசியுள்ளார்.


ஸ்டாலின் பேசியதின் சுருக்கம்: (ஒரு பூத்துல திமுக வாங்குன ஓட்டு 11.. ஆனா அந்த பூத்துல இருந்த திமுக கமிட்டி மெம்பர் மொத்தம் 25 பேர்.. காசுக்கு ஆசைப்பட்டு சொந்த இயக்கத்துக்கே வச்சுட்டாங்க ஆப்பு) 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin open talk about rk nagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->