ராகுல் காந்தி இருக்கட்டும்! மோடியை எதிர்த்துப் போட்டியிட தயாரா? ஓவைசிக்கு செக் வைக்கும் இண்டியா! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாராக என மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்தார்.

ஹைதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினராக இருக்கும் அசாதுதீன் ஓவைசி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஹைதராபாத் நகரில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் கட்சியே முழு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சுட்டிக்காட்டி பேசிய அவர் அறிக்கைகளை வெளியிடும் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து ஹைதராபாத்தில் போட்டியிட தயாராக என சவால் விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த மாநிலங்களை உறுப்பினர் சஞ்சய் ராவத் "ஓவைசி நாட்டின் உண்மையான தேசிய குடிமகன் என்றால் ராகுல் காந்திக்கு சவால் விடக்கூடாது.

பிரதமர் மோடிக்கு சவால் விடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் புகழ் அதிகரித்துள்ளதால் அவர் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே ஓவைசி பாஜக தலைவர்களுக்கு இது போன்ற விடுக்க வேண்டும்" என சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India alliance challenge owaisi to be ready to contest against modi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->