நாளை மறுநாள் 6 மணிக்கு நிறைவடையும் தேர்தல் பிரச்சாரம்.!!
Election Propaganda after tomorrow finish
இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு செய்தி குறிப்பு ஒன்றே வெளியிட்டுள்ளார். தேர்தலை நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் நடத்த அனைத்து வசதிகளையும் செய்து வருகிறது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 18ஆம் தேதி மாலைக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் செல்லப்படும்.
வாக்காளர்களுக்கு பூத் சிலீப் கொடுக்கும் பண்ணி 92 % நிறைவடைந்துள்ளது. ஏப்ரல் 17 மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
English Summary
Election Propaganda after tomorrow finish