பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: திருப்பூரில் இபிஎஸ் பிரசாரம்... எப்போது தெரியுமா?
Edappadi Palaniswami election campaign Tirupur
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் அருணாச்சலத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக இன்று மாலை 6 மணிக்கு திருப்பூர், பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா திடலில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல் அமைச்சரும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திடலில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
English Summary
Edappadi Palaniswami election campaign Tirupur