மத்திய அரசின் திட்டத்திற்கு திமுக எதிர்ப்பு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஸ்டாலின்!
DMK opposition to central govt plan
பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 % இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு 103-வது சட்ட, திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சில நாட்கள் முன் நிறைவேறியது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (12.01.2019) அன்று கையத்திட்டு ஒப்புதல் வழங்கினார். இதைதொடர்ந்து, அவரது ஒப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் (12.01.2019) முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மதோதவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடந்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
DMK opposition to central govt plan