மதிமுகவுக்கு "ஒத்த சீட்டை ஒதுக்கியது" திமுக.!! தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்.!! - Seithipunal
Seithipunal


எதிர் வரும் மக்களவை பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது திமுக. இது தொடர்பான தேர்தல் ஒப்பந்தத்தில் திமுக தலைமையிலான மு.க ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். 

இந்த தேர்தல் ஒந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ "இண்டியா கூட்டணிக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. திராவிடத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நிரந்தரமாக திமுகவுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.

எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது எந்த தொகுதி என்பது மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு திமுக அறிவிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரியவந்துள்ள வைகோ மாநிலங்களவை தேர்தல் குறித்து பேசவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK allocated single seat to MDMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->