செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு.!!
Chennai court verdict in senthil balaji case
சட்டவிரோத பண பரிவர்த்தனை கடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி மீதான குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் தன் தரப்பு வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
அதேபோன்று 32 வது முறையாக நீட்டிக் பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் 33வது முறையாக நீட்டிக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Chennai court verdict in senthil balaji case