கோவில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக் கொலை - முன்விரோதம் தான் காரணமா? - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை பெரியார் நகர் பகுதியில் உள்ள கங்கை முத்து மாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். 

இந்த விழாவில் அதே பகுதியை சேர்ந்த உத்ரேஷ் என்பவர் தாய் மற்றும் சகோதரியுடன் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்துள்ளார். இதையடுத்து ஊர்வலம் கோவில் அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு, உத்ரேஷை சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த, உத்ரேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட உத்ரேஷ் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். புதுச்சேரியில் கோவில் பால்குட ஊர்வலத்தின் போது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth murder in temple function at puthuchery


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->