ஓடும் ரெயிலில் தம்பதியினர் மீது சிறுநீர் கழித்த வாலிபர் - உ.பியில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஓடும் ரெயிலில் தம்பதியினர் மீது சிறுநீர் கழித்த வாலிபர் - உ.பியில் அதிர்ச்சி.!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் மூத்தக் குடிமக்கள் பயணம் செய்துள்ளனர். அதே பெட்டியில் இருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், அந்த தம்பதியர் மீதும் அவர்களது உடமைகள் மீதும் சிறுநீர் கழித்துள்ளார். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் படி, ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. 

மேலும், அவர் டெல்லியில் உள்ள குதுப் விஹாரைச் சேர்ந்த ரித்தேஷ் என்பதும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் இருந்து அவர் ரயிலில் ஏறியதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது. ஓடும் ரயிலில் பயணிகள் மீது இளைஞர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man urinated on old couples in up train


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->