விபச்சாரத் தொழில் நடத்திய கும்பல் - இளம்பெண்ணின் புகாரால் சிக்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் பத்தொன்பது வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், இந்த பெண்ணை கடந்த ஒரு மாதமாக காணவில்லை. 

இதனால், அவரது உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த பெண் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் படி அவர்கள் விரைந்துச் சென்று அவரிடம் விசாரணை செய்த போது, தன்னை பலரும் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதன் விவரம் பின்வருமாறு:- "திருமணமான சில நாட்களிலேயே தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், அந்தப் பெண் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது சிவனேஷ் பாபு என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அவர் அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை தனியாக வீடு எடுத்து தங்க வைத்தார். பின்னர் தனது நண்பர் எனக் கூறி, வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

மேலும், ராகுலின் நண்பர் செந்தில்குமார் என்பவரை தரகராக பயன்படுத்தி பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்தப்பெண் அங்கிருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ராகுல், தரகர் செந்தில் குமார் உள்ளிட்டோரைக் கைது செய்து, முக்கிய குற்றவாளியான சிவனேஷ் பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for prostitution in coimbatore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->