ராகுல் காந்தி யாத்திரை நிறைவு விழா: முதல்வர் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ராகுல் காந்தி யாத்திரை நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சருடன் வைகோ, திருமாவளவன் உள்ளிட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். 

ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கி இருந்தார். யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் விமானம் மூலம் நாளை மும்பை செல்ல உள்ளார். 

நாளை மும்பை தாதரியில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சத்ய பூமியில் யாத்திரையை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi Yatra closing ceremony issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->