அமெரிக்கா : நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்ற முயன்ற இந்தியர் பிணமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா : நீரில் அடித்துச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்ற முயன்ற இந்தியர் பிணமாக மீட்பு.!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பபட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொட்டி வெங்கட ராஜேஷ் குமார். இவர் அமெரிக்கா நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்றுள்ளார். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார். 

இதைத் தொடர்ந்து, பொட்டி வெங்கட ராஜேஷ் குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளும் கடந்த மே மாதம் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ராஜேஷ் ஜாக்சன்வில்லே பீச்சுக்கு தனது மனைவி,குழந்தைகளுடன் சென்று உள்ளார். 

அங்கு ராஜேஷ் மகன் கடலின் உள்ளே சென்றுள்ளார். அப்போது கடலின் நீரோட்டத்தில் சிக்கியுள்ளார். இதைப்பார்த்த ராஜேஷ் மகனை காப்பாற்ற சென்று உள்ளார். ஆனால், அவரும் நீரோட்டத்தில் சிக்கி இரண்டு பேரும் அடித்து செல்லப்பட்டனர். 

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை ஓடிச்சென்று கைபற்றிக் காப்பாற்றிக் கரைக்கு கொண்டுவந்தனர். உடனே இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜேஷ் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளனர். 

மேலும், ராஜேஷின் பன்னிரண்டு வயது மகன் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நீரில் அடித்துச் சென்ற மகனைக் காப்பாற்ற சென்ற தந்தை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian man died drowned water in america


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->