#Breaking: இந்திய - சீன எல்லையில் பதற்றம்.. இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம்.!!
India China border violent increased 3 Indian Army Officers passed away
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகள் திரும்ப பெறப்படும் செயல்முறையின் போது இந்திய - சீன இராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது இருபடைக்குள்ளும் சண்டை வலுத்த நிலையில், இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் 2 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன இராணுவம் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. மேலும், நேற்று இரவே சீன இராணுவம் அத்துமீறியதாக தெரியவருகிறது.
இதனால் இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பதற்றத்தை தணிக்க இந்திய - சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
துவக்கத்தில் இருந்தே சீனா எல்லை விவகாரத்தில் அத்துமீறி ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானிற்கும் மறைமுக ஆதரவு அளித்து இந்தியாவை நெருக்கடி சூழலில் தள்ளி வருகிறது. இந்த சூழலில், இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்டி அடிக்கும் சீனா... இராணுவ தலைமையுடன் ஆலோசனையை துவங்கும் இந்தியா..!!
Tamil online news Today News in Tamil
English Summary
India China border violent increased 3 Indian Army Officers passed away