டெல்லியை உலுக்கிய கோர கட்டிட விபத்து.! 7 பேர் சம்பவ இடத்திலேயே., 16 மருத்துவமனையில் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லி நகரில் உள்ள மேற்கு பகுதியில் இருக்கும் மோதி நகர தொழிற்சாலையில் நேற்றிரவு சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்து சிதறியதும்., அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 

இந்த சம்பவத்தில் அங்கிருந்த பொதுமக்கள் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்காக போராடி துடித்தனர்., இதனை கண்ட அங்குள்ள மக்கள் உடனடியாக சம்பவம் குறித்து காவல் துறையருக்கும்., மீட்பு படையினருக்கும் தகவல் வழங்கினர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உடனடியாக இடிபாடுகளில் சிக்கியிருந்த 15 பேரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும்., இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஒரு குழந்தை உட்பட 7 பேரை மீட்டனர். 

இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 16 பெரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும்., இந்த சம்பவத்தில் 7 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அவர்களின் நிலைமை குறித்து அறியாத உறவினர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதால்., மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Delhi building collapse by cylinder explosion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->