ஐயோ. அம்மா.. ஆஃபர்.! ஒரு புடவை 10 ரூபாய் தான்.!! அள்ளுது கூட்டம்.!! அதிரடி ஆஃபர்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்த கூடிய ஒரு வசனம். ''ஒருத்தனை ஏமாற்ற வேண்டுமானால், அவனில் ஆசையை தூண்ட வேண்டும்'', சதுரங்க வேட்டை படத்தில் வரக்கூடிய இந்த வசனம் போல் தான் இந்தியாவில் உள்ள 75 % துணி கடைகள் ஆடி ஆஃபர்.. அதிரடி ஆஃபர்.. என்று துணியின் விலையை இரண்டு மடங்காகி பின் பாதி விலையை குறைத்து, அவர்கள் விற்க நினைத்த விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனர்.

இதில் மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்றால், 500 மதிப்புடைய ஒரு துணியை 1000 என்று சொல்லி, அதனை 50 % தள்ளுபடி என்று 500 க்கு விற்பனை செய்தால் அது மக்களை ஏமாற்றுவதுக்கு தான் சமன். இங்கு மக்களின் ஆசை தூண்டப்படுகிறது. இந்நிலையில், தெலுங்கான மாநிலத்தின் ஒரு பிரபல துணி கடையில் 10 ரூபாய்க்கு புடவை என்று விளம்பரம் செய்ததன் விளைவு, பெரிய கலவரமே ஆகிவிட்டது.

அம்மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கிவரும் பிரபல துணிக்கடையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக தகவல் பரவியுள்ளது.

இதன் காரணமாக அந்த கடையின் முன் அதிகாலை முதலே அந்த பெண்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால், கடை நிர்வாகம் கடையின் ஷட்டரை மூடியது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு உள்ளே போக முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, ஏற்பட்ட அங்கு கடும் கூட்ட நெரிசல் சிக்கி இரண்டு பெண்கள் மயக்கமடைந்தனர். மேலும் கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 8 க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஒரு பெண்ணின் 1000 ரூபாய் காசும், மற்றும் ஒரு பெண்ணின் தங்க சங்கிலியம் திருடு போய்விட்டது. இதனால் அந்த கடை முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

discount saree in 10 rupee


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->