அடிக்கும் வெயிலுக்கு அனில் அம்பானி முதல் நம்ம ஏரியா சனல் சாத்தப்பன் வரை செல்லும் ஒரே இடம் இதுதான்.!! இதற்காகத்தான்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த வருடத்தில் பெய்ய வேண்டிய பருவமழையும் நம்மை ஏமாற்றி பெரும் துயருக்கு நம்மை ஆழ்த்தியது. வரும் நாட்களில் பெரும் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற நிலையானது இருந்து வருகிறது. 

இந்த சூழலில் கடுமையாக வாட்டி வரும் வெயிலின் காரணமாக பயணம் மேற்கொண்டாலோ அல்லது பிற இடங்களுக்கு பணி நிமித்ததின் காரணமாக வெயிலில் செல்ல வேண்டிய சூழ்நிலையானது ஏற்படும். இந்த நிலையில்., அதிக தாகத்தின் காரணமாக காத்திருக்கும் இடங்களில் குளிர்ந்த நிலையில் இருக்கும் மோர் அல்லது பழசாறு வகைகள் கிடைக்குமா? என்று நினைத்திருப்போம். 

இந்த வெயிலின் தாக்கம் காரணமாக கடைகளில் விற்பனை செய்யப்படும் பழசாறு வகைகள் மற்றும் பிற குளிர் பானங்கள் விற்பனையானது பெரும்பான்மையாக நடந்து வரும் நிலையில்., பெரும்பாலான மக்கள் பாரம்பரியமான மண்பாண்ட நீரை அருந்த மறந்து போகின்றனர். 

வெயில் காலத்தில் ஒரு மண்பாண்ட குடத்தை வாங்கி வைப்பதற்கு இயலாமல் மற்றும் தெரிந்து அலட்சியத்தால் கைவிடுகிறோம். பெரும்பாலான மக்கள் வெயில் காலத்தில் வரும் பிரச்னையை அறிந்து மண்பாண்டத்தை வீட்டிற்கு வாங்கி சென்று அதன் மூலம் இயற்கையான குளிர்ந்த நீரை உபயோகம் செய்து வருகின்றனர்.  

இந்த வருடத்தில் அதிகளவு வெயில் வாட்டி வதைக்கும் என்று அறிவிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில்., நமது உடலை கண்டிப்பாக நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். சில காணொளிகள் விளம்பரங்களில் காண்பிக்கப்படுவது போல குளிர்பானங்களை அருந்துவதற்கு பதிலாக மண்பாண்டங்களை வாங்கி உபயோகம் செய்வது நமது உடலுக்கு நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People searching for pottery items


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->