காங்கிரஸ் அடித்த அந்தர் பல்டி! அதிர்ச்சியில் கப்சிப் ஆன திமுக! பொழப்பு போச்சே!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்ட எல்லா முயற்சியும் எடுக்கப்படும். இது கட்சியின் நிலைப்பாடு என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத்தின் பேச்சு தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் இந்த பேச்சு தமிழகத்தில் வெளிவராதபடி திமுக தற்போது கப்சிப் ஆகியுள்ளது. 
 
பாஜகவிற்கு எதிராக, மதச்சார்பின்மைக்காக காங்கிரஸ்-திமுகவை ஆதரிக்கிறோம் என  சொல்லும் சிறுபான்மையின இயக்கங்களும் தற்போது கப்சிப் ஆகியுள்ளன. அதேபோல ராகுலின் 'நான் கவுல் பிராமணன்', காங்கிரசின் 10% இட ஒதுக்கீடு ஆதரவு என எல்லாவற்றுக்கும் மௌனம் காப்பது என திமுக சத்தமே இல்லாமல் கடந்து செல்கிறார்கள். 

திராவிட இயக்கங்கள் பிரச்சாரமே, பிராமணர்களுக்கு எதிரானது, இந்துத்துவாவிற்கு எதிரான பேச்சு தான். திமுக தலைவர் ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் இந்து மத சடங்குகளுக்கு எதிராக பேசி வருகிறார். ஆனால் காங்கிரஸ் பொது செயலாளர் பாஜக கட்டுவோம் என கூறிக்கொண்டு வரும் ராமர் கோயிலை கட்டுவோம் என கூறியுள்ளார். 

அதேபோல உயர்சாதிக்கு எதிரான இட ஒதுக்கீடு எதிர்க்கும் திமுக, அதே விஷயத்தில் முரண்பட்டு நிற்கும் காங்கிரசுடன் கைகோர்த்திருப்பது சமூக நீதி விஷயத்தில் திமுகவின் முகத்திரையும் கிழியும் நிலையில் உள்ளது. இந்த சிக்கல்களினால் திமுகவோ, திமுகவே நம்பியே பொழப்பை ஓட்டும் கழகங்களும் மதச்சார்பின்மை, சமூகநீதி குறித்தெல்லாம் பேசுவதற்கு சிக்கல் எழுந்துள்ளது.

அவர்கள் அதனை பேசினால் கடும் விமர்சனம் வைக்கப்படும். திமுகவின் பிரதான பிரச்சாரமே மதச்சார்பின்மை, சமூகநீதி என்பது தான். அதனை வைத்து தான் சிறுபான்மை வாக்குகளை அள்ளி வந்தனர். தற்போது காங்கிரஸ் திமுகவிற்கு வேட்டுவைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress leader said build ramar temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->