விஸ்வாசம் படத்தால் வெறுப்படைந்த அஜித்குமார்! கோபத்தில் தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம்! - Seithipunal
Seithipunal


 

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படம் ரிலீஸ் ஆனதை அடுத்து ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு டிக்கெட் இல்லாமல் காத்திருக்கின்றனர்.


இந்த நிலையில், வேலூர் அருகே  காட்டிபாடியை அடுத்த கிழிஞ்சூரைச் சேர்ந்தவர் பாண்டியன். பாண்டியனின் மகன் அஜித்குமார் நடிகர் தல அஜித்தின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். இன்று வெளியான விஸ்வாசம் படத்தை பார்க்க தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் தந்தை பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அஜித்குமார்,  பணம் தராததால் தந்தை என்று கூட பார்க்காமல் பாண்டியன் தூங்கிக்கொண்டிருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

 

பெட்ரோல் ஊற்றி எரித்ததில் படுகாயம் அடைந்த பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். படத்திற்காக பெற்று வளர்த்த தந்தையையே கொலை செய்யும் அளவிற்கு சென்ற இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young boy fired his dad for viswasam movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->