பெட்டி நிறைய பணத்துடன் வந்த தயாரிப்பாளர்... நடிகர் அப்பாஸ் செய்த செயல்... சுவாரஸ்யமான சம்பவம்.!
Seiyaru Balu shared an interesting incident of Abbas who did not change his mind even when the market was gone
தமிழ் சினிமாவில் முன்பொரு காலத்தில் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தவர்.
எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு சறுக்கல் வருவது போல இவருக்கும் மார்க்கெட் சறுக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகளில்லாமல் தவித்து வந்தார் அப்பாஸ். மேலும் இவர் இந்தியாவில் இருந்து வெளியேறி தற்போது நியூசிலாந்து நாட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு அப்பாஸ் பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் பாலு பிரபலமான பத்திரிகை ஒன்றில் பணியாற்றி இருந்திருக்கிறார். தொலைந்து போன ஹீரோக்கள் என்ற கட்டுரைக்கு பேட்டி எடுப்பதற்காக அப்பாஸை சந்தித்துள்ளார்.
இவர் அப்பாஸை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் ஒருவர் பல லட்ச ரூபாயை கையில் வைத்துக் கொண்டு அப்பாஸை புதுப்படத்தில் முன்பதிவு செய்வதற்காக வந்திருக்கிறார். இதனைப் பார்த்த பாஸ் என்னை நம்பி பணத்தை போட்டு நீங்கள் நஷ்டமடைய வேண்டாம் என்று சிரித்தபடியே கூறினாராம். இதனை தற்போது ஒரு பேட்டியில் செய்யாறு பாலு பகிர்ந்து இருக்கிறார். தற்போது நியூசிலாந்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார் அப்பாஸ். அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது, மெக்கானிக் வேலை என சிறு சிறு வேலைகளையும் அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Seiyaru Balu shared an interesting incident of Abbas who did not change his mind even when the market was gone