ராஜமௌலியின் மெகா பிளான்.. 'மகாபாரதம்' திரைப்படம் 10 பாகங்கள்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு உலக அளவில் பிரபலமானார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த திரைப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மகாபாரதத்தை இயக்குனர் ராஜமவுலி திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்திய கதைகளை உலகத்திற்கு சொல்ல விரும்புகிறேன். மஹாபாரத கதையை படமாக்குவது தான் எனது நீண்ட நாள் கனவு திட்டம் என தெரிவித்துள்ளார். மேலும், ராஜமவுலியிடம் மகாபாரதம் தொலைக்காட்சியில் 266 எபிசோடுகளாக ஒளிபரப்பானது. அதை நீங்கள் படமாக்கும் போது எத்தனை பாகங்களாக எடுப்பீர்கள் என்று கேள்வியை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ராஜமவுலி இது மிகவும் பெரிய படம். மகாபாரதம் எடுத்தால் குறைந்தபட்சம் 10 பாகங்களாக எடுக்க வேண்டி வரும் என்று நினைக்கிறேன். ஆனால், எத்தனை பாகங்களாக வரும் என்பதை இப்போதே சரியாக கணிக்க முடியாது. மகாபாரதம் எனது நீண்ட கால கனவு படம். இந்த படத்திற்கு அடி எடுத்து வைக்க நிறைய காலம் ஆகும். அதற்கு முன்பாக நான்கு அல்லது ஐந்து படங்கள் எடுத்து விடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajamouli direct mahabharatham 10 parts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->