கமலுக்கு பெருகும் ஆதரவு.....காரணம் இந்த நடிகை தானா?! - Seithipunal
Seithipunal


கோவையில் பேட்டியளித்த நடிகை ஓவியா நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வரவேண்டும் என பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தமிழக மக்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை ஓவியா. அதற்கு பின்னர் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். சமூக வலைதளத்தில் எங்கும் பரவி இருப்பது ஓவியா ஆர்மிக்காரர்கள் தான். 

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல நடிகை ஓவியா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, அரசியலுக்கு வரவேண்டும் என்று நாம் நினைத்தாலும் அது மக்கள் வாக்களித்தால் மட்டுமே முடியும். மக்கள் அனைவருக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. அதையே தான் நடிகர் கமலும் செய்ய நினைக்கிறார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும். அவர் மிக நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வருவார் என்று நான் நினைக்கிறேன். கமலுக்கு நான் எனது முழு ஆதரவை அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமலுக்கு ஓவியா தனது ஆதரவை தெரிவித்திருப்பதால் அவரது ரசிகர்களும் கமலுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Oviya said Actor Kamal should come to politics.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->