அடேங்கப்பா ரஜினி தங்கியிருந்தார் என்பதற்காக இப்படி ஒரு மாற்றமா?ஹோட்டல் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு.,ஆச்சரியத்தின் உச்சம் .!
அடேங்கப்பா ரஜினி தங்கியிருந்தார் என்பதற்காக இப்படி ஒரு மாற்றமா? ஹோட்டல் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு.,ஆச்சரியத்தின் உச்சம் .!
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் உச்சநிலையில் இருப்பவர். இவர் அரசியலுக்கு வந்தபிறகு அதை சார்ந்த பல எதிர்ப்புக்கள் வந்தாலும் , நடிகராக அவர் இன்னும் உச்ச நிலையிலேயே உள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றார்.
இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங்கில் நடைபெற்றது.அப்பொழுது ரஜினி அங்குள்ள அலிட்டா ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸில் 10 நாள்கள் தங்கியிருந்தார்.இவ்வாறு ரஜினி அங்கு தங்கியதற்காக ஹோட்டல் பெயரையே மாற்றியுள்ளார் அதன் உரிமையாளர்.
ரஜினி தங்கியதை தொடர்ந்து அந்த ரிசார்ட்டின் பெயர் `ரஜினிவில்லா #3' என மாற்றப்பட்டுள்ளது.மேலும் `ரஜினிவில்லா #3' என்ற பெயர் பலகையுடன் ஹொட்டல் உரிமையாளர் ரஜினியுடன் எடுத்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய ஹொட்டல் உரிமையாளர், ``ஒரு சிறந்த மனிதர் எங்கள் ஹோட்டலில் தங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்களின் அன்பைக் காண்பிக்கவே ஹோட்டல் பெயரை மாற்றம் செய்தோம் என தெரிவித்தார்.
இதேபோல், டார்ஜிலிங்கில் தங்கியிருக்கும் போது ரஜினி டீ குடித்த கடைக்கும் சாய் டீ பார் லவுஞ்சுக்கு பதிலாகத் `தலைவா ஸ்பெஷல்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
English Summary
hotel name changed as rajini villa for rajini staying there