நடிகரின் வீட்டின் முன் தீக்குளித்த ரசிகர்! இறுதியாக கூறிய ஒத்த வார்த்தையால் வேதனையில் மூழ்கிய நடிகர்.! - Seithipunal
Seithipunal


தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கே.ஜி.எஃப் படத்தில் நடித்தவர் யஷ்.

    

இவருக்கு நேற்று பிறந்தநாள். ஆனால் நடிகர் அம்பரீஷ் இறந்ததால் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை என  தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலை அடைந்தனர். இந்நிலையில் ரவி என்கிற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் பயங்கர தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

         

மமேலும் ரவி மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது யஷ் வருவாரா, அவரை பார்க்க வேண்டும் என்று தொடர்ந்து  கூறியுள்ளார் ரவி. இறுதியில் யஷ் வந்தபோது அவரை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி பின்னர் உயிரிழந்தார். 

தனது ரசிகர் ரவியின் மறைவால் யஷ் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

பின்னர் இது குறித்து யஷ் கூறுகையில், ரசிகர்கள் அன்பு வைக்க வேண்டியது தான். அதற்காக தங்களை காயப்படுத்திக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இனி யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் நான் வர மாட்டேன் என் மீதான அன்பையும், மரியாதையையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fan suice in front of hero yash house


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->