ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் உயர்வு! ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி.!
Ready made garment export trade rise
உலக நாடுகளை பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சார்ந்துள்ளது. பணம் வீக்கம் காரணமாக அமெரிக்கா ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது.
புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பாராத அளவுக்கு கைகொடுக்கவில்லை. இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கடந்து 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆயிரத்து 628 கோடி இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் 12,248 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11, 917 கோடியாக இருந்த பின்னலாடை வர்த்தகம் 2024 மார்ச் மாதம் 12,224 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து அதிகரிக்கும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
Ready made garment export trade rise