ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மீண்டு குண்டு வெடிப்பு.! இருவர் பலி - எட்டு பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் உள்ள பெஷாவரில் இருந்து பலுசிஸ்தானில் உள்ள குவெட்டாவுக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் சிச்சாவட்னி ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இந்த பயங்கர வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதன் பின்னர் இந்த வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

இதேபோல்,  இந்த ரெயிலில் கடந்த மாதம் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்த விபத்தில், எட்டு பேர் படுகாயமடைந்தனர். அப்போது ஜாபர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு ஜாபர் எக்ஸ்பிரஸின் இரண்டாவது குண்டு வெடிப்பு ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples died and eight peoples injury for bomb explosion in jabar express


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->