தாய்லாந்தின் ராஜா, ராணிக்கு கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன்(70) மற்றும் ராணி சுதிதா(44) ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் சிறிது காலம் பணிகளில் இருந்து விலகி இருக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதாகவும், இதுவரை லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் அரச பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய நிலையில், பாங்காக் மற்றும் தாய்லாந்தின் சுற்றுலா தலங்களில் ஓமிக்ரான் துணை வகைகளால் பரவும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த இருதினங்களுக்கு முன்பு தாய்லாந்து இளவரசி பஜ்ராகிதியாபா தேசிய பூங்காவில் திடீரென மயங்கி, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thailands king queen test positive for COVID 19


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->