இஸ்ரேலில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி - சுட்டு வீழ்த்திய போலீசார்.! - Seithipunal
Seithipunal


இஸ்ரேலில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி - சுட்டு வீழ்த்திய போலீசார்.!

இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகரில் கியாஸ் நிரப்பும் நிலையம் அருகே பயங்கரவாதி ஒருவர் தனது காரை மக்களின் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். பொதுமக்களின் இந்த சத்தம் கேட்டு அருகே இருந்த அதிகாரிகள் பதறியடித்து ஓடியுள்ளனர். 

அப்போது அந்த கார் ஓட்டுநர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க முயற்சி உள்ளார். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக அந்த கார் ஓட்டுநரை சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

இதையடுத்து, இந்த விபத்தில் குடிமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "பயங்கரவாதி தெளிவான திட்டத்துடன் மக்கள் மீது மோதி, விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் பின்னணி, இந்தத் தாக்குதலுக்கான நோக்கம், தடயம் உள்ளிட்டவற்றை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றுத் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் சுற்றுலாவாசிகள் என்றுத் தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த பகுதியை தங்களது கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அத்துடன் தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

terrorist attack peoples police officer shot down


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->