பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 9 போலீஸ் அதிகாரிகள் பலி, 16 பேர் காயம் - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் தற்கொலைப்படை தாக்குதலில் 9 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவில் இருந்து தென்கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கச்சி மாவட்டத்தில் சிபி நகருக்கு அருகே போலீஸ் டிரக்கை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தற்கொலை குண்டுதாரி டிரக் மீது மோதியதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 9 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த பாதுகாப்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிபி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suicide bomber kills nine police officers and 16 injured in Pakistan


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->