சிங்கப்பூரில் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியர்.. 12 பிரம்படி.. 18 ஆண்டுகள் சிறை.! - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் பனி பெண்ணிடம் அத்துமீறிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சில குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் இங்கு பிரம்படி வழங்குவதும் வழக்கம். மேலும், ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்று அதனை அனுபவித்த பிறகும், மீண்டும் அதே குற்றத்தை ஒருவர் செய்தால் அவருக்கு சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் கிடைக்கும்.

இந்த நிலையில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு கடுமையான தண்டனைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்த மார்க் கலைவாணன் கலையரசன் (வயது 44) என்பவர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக 16 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த 2017 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானார். 

சிறையில் இருந்து வெளிவந்த கலையரசன் அப்பார்ட்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் அத்துமீறி நுழைந்து பணிப்பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கில் கலையரசன் மீண்டும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கலையரசன் சமூகத்தில் உள்ள பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர் என அவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 பிரம்படிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இத்தனைய கடுமையான தண்டனைகள் அவசியம் என சிங்கப்பூர் அரசாங்கம் பலமுறை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapore govt heavy punishment to indian


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->