17 வயது மாணவனுக்கு மது கொடுத்து அத்துமீறிய ஆசியயை கைது.!
School teacher harassment to 17 years old boy in Singapore
பள்ளி மாணவனை மது அருந்த வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனின் தாயார் ஆசிரியைக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது மகன் படிப்பு மற்றும் பள்ளி மீது நாட்டமில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்த அந்த ஆசிரியை நான் பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த மாணவனை ஒரு நாள் இரவு உணவிற்கு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற ஆசிரியை மன அழுத்தத்தில் இருந்து விடுபட பாலியல் ரீதியாக உனது எண்ணங்களை திருப்பு எனக் கூறியுள்ளார். மேலும் அந்த மாணவனை மது அருந்த வற்புறுத்தி ஆடைகளை கழட்ட சொல்லியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவனின் தாயார் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அந்த ஆசிரியை தானாகவே பள்ளியை விட்டு விலகியுள்ளார்.தற்போது அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு 54 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
School teacher harassment to 17 years old boy in Singapore