உக்ரைன் போர்... முடிவுக்கு கொண்டு வர ரிஷி சுனக் மற்றும் ஜோ பைடன் உறுதி...! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 15 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் சர்வதேச சந்தைகள் மற்றும் உலக நாடுகளின் பொருளாதாரங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவின் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வலியுறுத்தியும் போர் முடிவு பெறாமல் நடந்து வருகிறது.

இதனிடையே உக்ரைனின் ககோவ்கா அணையை ரஷ்ய படைகள் தாக்கியதில் அணை உடைந்து 50க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் உக்ரைன் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 2 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தை முடிவின்பொழுது உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டின் தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர்.

இது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள் போரில் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள் வழங்கி உதவி வந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டு நாடுகளும் திட்டமிட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishi Sunak and Joe Biden assured to End Ukraine War


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->