பெங்களூரில் கொடூரம் : புகார் கொடுக்க வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்பெக்டர்.!
near banglore police inspector sexuall harassment to woman in police station
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் ஒருவர் ரூ.15 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் அவர் அந்த பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
பணத்தைத் திரும்ப தருவது தொடர்பாக அந்த பெண் கேட்டதற்கு அந்த நபர் சரியாக பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக அந்த பெண், பண மோசடி செய்தவர் மீது கொடிகேஹள்ளி காவல் நிலையத்திற்கு சென்று அங்குள்ள தலைமைகாவலர் ராஜண்ணாவிடம் புகார் அளித்துள்ளார்.
அப்போது அந்த இளம் பெண்ணின் மொபைல் எண்ணை பெற்று கொண்ட ராஜண்ணா, செல்போனில் அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த இளம்பெண்ணை விசாரணை என்ற பெயரில் தலைமை காவலர் ராஜண்ணா, காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை அங்குள்ள அறைக்கு அழைத்து சென்று அவரை கற்பழித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளம்பெண், துணை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை காவலர் ராஜண்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
English Summary
near banglore police inspector sexuall harassment to woman in police station