ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோவில் மீது தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள இந்து கோவில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி சேதப்படுத்துவதும், அவமதிப்பு செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த தாக்குதல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி அவமதிப்பு செய்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல் இந்த கோவில் காம்பவுண்டு சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகங்களும் எழுதப்பட்டுள்ளது. 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு, கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா நாட்டில் இரண்டு மாதங்களில் நான்கு கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

khalisthan supporters attack hindhu temple in austreliya


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->