சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறைதண்டனை விதிப்பு.. காரணம் என்ன.?
Jail punishment for Indian in Singapore
சிங்கப்பூரில் காதலியை தாக்கிய வாலிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான விக்னேஸ்வரன் வயது 42 தனது காதலில் லட்சுமி உடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இதில் இவர்கள் தங்களது வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நாய் வளர்ப்பது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாய் தகராறு முற்றியதில் விக்னேஸ்வரன் தனது காதலியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விக்னேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இளைஞருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது.
English Summary
Jail punishment for Indian in Singapore