சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்!. - Seithipunal
Seithipunal


உலகில் பல நாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

 "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதை தாரக மந்திரமாகக் கொண்ட இந்தியாவிலும் பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். கலாச்சார பன்முகத்தன்மை நிறைந்த உலகில் நாடுகளிடையே கலாச்சார ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக மக்கள் அனைவரையும் அன்பு என்ற ஒரே குடையின்கீழ் கொண்டுவருவது, ஒருவருக்கொருவர் நேசம் பாராட்டுவது இத்தினத்தின் தலையாய நோக்கங்கள் ஆகும்

முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.ராம் ஜெத்மலானி அவர்கள் பிறந்ததினம்!.

ராம் பூல்சந்த் ஜெத்மலானி (செப்டம்பர் 14, 1923 - செப்டம்பர் 8, 2019) ஒரு இந்திய புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் இந்தியாவின் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் , இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும் , உச்ச நீதிமன்ற பார் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.

 1959 ஆம் ஆண்டு நானாவதி வழக்கில் யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் உடன் ஆஜரானதன் மூலம் ஜெத்மலானி பிரபலமானார் , பின்னர் அவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக ஆனார்.

அவசரநிலைக்கு முன்னும் பின்னும் நான்கு முறை இந்திய பார் கவுன்சிலின் தலைவராக இருந்துள்ளார். 1996 ஆம் ஆண்டில், அவர் சர்வதேச பார் அசோசியேஷனிலும் உறுப்பினரானார் . சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழக சட்டப் பள்ளிகளுக்கான எமரிட்டஸ் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார் . 2010 ஆம் ஆண்டில், அவர் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முதல் தலைமை ஆளுநர் திரு.வில்லியம் பெண்டிங் பிரபு அவர்கள் பிறந்ததினம்!.

பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

 இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 22வது வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினரானார். 1603ஆம் ஆண்டு சென்னையின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது சர் தாமஸ் மன்றோ செயல்படுத்திய வருவாய் சீர்திருத்தங்களை ஆதரித்தார்.

 இந்திய மக்களின் நலனைப் பேணுவதே இந்தியாவை ஆளும் பிரிட்டிஷாரின் தலையாய கடமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட முதல் தலைமை ஆளுநர் பெண்டிங் என்பதில் ஐயமில்லை.

  வில்லியம் பெண்டிங்கின் ஆட்சியில் ஆங்கிலக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வில்லியம் பெண்டிங் பிரபு 1839ஆம் ஆண்டு ஜீன் 17 ஆம் தேதி தன்னுடைய 64-வது வயதில் பிரான்சில் மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

International cultural unity day


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->