இங்கிலாந்தில் இந்திய மாணவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த பிரித் விகால் (வயது 20) என்ற மாணவன் படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்டார். அப்போது இவருடன் 20 வயது இளம்பெண் ஒருவரும் கலந்து கொண்டார்.

இதில் அந்த இளம் பெண் நன்றாக மது அருந்தி போதை மயக்கத்தில் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட இந்திய மாணவர் அந்த பெண்ணை கை தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார். அதன் பின்னர் அந்த பெண்ணை சிறிது தரும் தூக்கியபடி தான் தங்கி இருந்த அறைக்கு சென்றார்.

அங்கு போதையில் இருந்த இளம் பெண்ணை பயன்படுத்திக் கொண்ட இந்திய மாணவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து அந்தப் பெண் எழுந்துள்ளார். அப்போது அந்தப் பெண் உடுத்தியிருந்த ஆடைகள் களைந்து கிடைப்பதையும் உடலில் ரத்த காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 இது குறித்து உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் போதையில் இருந்த பெண்ணை கையிலும், தோளிலும் தூக்கிச் சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 அதன் அடிப்படையில் இந்திய இளைஞர் கைது செய்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கில் இந்திய இளைஞருக்கு 6 ஆண்டு 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian student 6 years prisoner in England


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->