பெரும் பரபரப்பு.. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் "இம்ரான் கான்" அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பரிசுப்பொருட்களை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது கிடைத்த பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பிடிஐ தலைவருமான இம்ரான் கான் சற்று முன்னர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியில் இருந்து பாகிஸ்தானின் துணை ராணுவ படையால் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானபோது இம்ரான் கான் கைது பாகிஸ்தானின் துணை ராணுவ படையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த இம்ரான் கானை அவருடைய காருடன் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Pakistan prime minister Imran khan arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->