சிங்கப்பூர் : சொகுசு விடுதியில் போதை விருந்து.. 49 பேர் கைது.!
Drugs party in Singapore 49 arrested
சிங்கப்பூரில் தனியார் சொகுசு விடுதியில் போதை விருந்து கலந்து கொண்ட 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சென்டோசா தீவில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள தனியார் சொகுசு விடுதிக்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு போதைப்பொருள் பயன்படுத்திய 49 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் சிஎன்பி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இதில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசி, கெட்டமைன் போன்ற போதை பொருட்கள் இருந்துள்ளன.
மேலும் இதில் கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 வயது முதல் 46 வயது உடையவர்களாவர். மேலும், இதில் 35 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Drugs party in Singapore 49 arrested