பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வர இலங்கை அனுமதி - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

சீனா பாகிஸ்தானின் கடற்படைக்காக பி.என்.எஸ். தைமூர் என்ற ஏவுகணை தாங்கி போர்க்கப்பலை, ஷாங்காய் நகரில் உள்ள ஹுடாங் - ஸாங்குவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கியுள்ளது.

மேலும் போர்க்கப்பல், கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டது.

இதையடுத்து மலேசியாவில் இருந்து புறப்படும் கப்பலை வங்கதேசத்தில் சட்டோகிராம் துறைமுகத்தில் ஆகஸ்ட் 7-லிருந்து 10ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்ட நிலையில், இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் என்பதால் பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி மறுத்துள்ளார்.

இதையடுத்து மலேஷியாவில் இருந்து செல்லும் பி.என்.எஸ். தைமூர் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆகஸ்ட் 12 - 15 வரை நிறுத்தி செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China made Pakistan ship comes to srilanka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->