நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து: பரிதாபமாக உயிரிழந்த 3 பேர்! சீனாவில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


வடக்கு சீனா ஷாங்க்கிசி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தினால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து, நிலக்கரியை சேமித்து வைக்க பயன்படுத்தும் குழியை 4 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழியில் சிக்கிக்கொண்டிருந்த ஒருவரை பத்திரமாக மீட்டனர். 

ஆனால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இதே நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து மீட்பு படையினரும் போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China coal mine accident 3 people died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->