மியான்மர்.! பேருந்து நிறுத்தம் அருகே வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மியான்மரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மியான்மரின் வணிகமயமான யாங்கூன் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென்று வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டிய நிலையில் இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. 

இதையடுத்து வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு அருகில் கையறி வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளதாகவும்,  இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus stop near bombblast in Myanmar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->