தேநீருக்கு பதிலாக லஸ்ஸி, சர்பத் குடிக்க.. பொதுமக்களுக்கு அரசு பரிந்துரை.!
Avoid tea in Pakistan
இலங்கை போன்று பாகிஸ்தானிலும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் நிதி சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் வளர்ச்சித்துறை அமைச்சர், டீ பொதுமக்கள் குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், டீ குடிப்பதற்கும் பொருளாதாரத்திற்கு என்ன சம்பந்தம் என இணையதளத்தில் பலரும் அவர் பேசிய வீடியோவை பகிர்ந்து கிண்டல் கேலிக்குள்ளானது.
இந்த, நிலையில் தேயிலை இறக்குமதி செலவை குறைக்கும் விதமாக தேநீருக்கு பதிலாக லெஸ்ஸி, சர்பத் போன்ற பானங்களை குடிக்கும்படி பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு உயர் கல்வி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.