வணிக வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு - 8 பேர் பலி, 9 பேர் காயம் - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் வணிக வளாகத்தில் நேற்று மக்கள் வழக்கம் போல் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் வணிக வளாகத்திலிருந்து வெளியே வருபவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரை சுட்டுக்கொண்டனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட தகவலில், இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 died 9 injured in Texas mall shooting in america


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->