புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 70 ராணுவ வீரர்கள் பலி
70 soldiers killed in terrorist Attack in Burkina Faso
வடக்கு புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் அதிகரித்து உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் லட்சம் கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில் புர்கினா பாசோவின் வடக்கு மாகாணமான ஒடலனில் உள்ள டியே நகர் பகுதியில் ராணுவ வீரர்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 70 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
70 soldiers killed in terrorist Attack in Burkina Faso