மணிலா அருகே பயங்கர தீ விபத்து - குழந்தை உட்பட 7 பேர் பலி - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் தலைநகர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தென்கிழக்கே மக்கள்தொகை அதிகம் கொண்ட டெய்டே நகரில் உள்ள நெரிசலான குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது. மேலும் தீ விபத்தில் சிக்கி 2 வயது குழந்தை உள்பட 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தானது வயரிங் பழுதடைந்ததால் ஏற்பட்டு, அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிலிப்பைன்ஸில் தீவுகளுக்கு இடையே கப்பல் தீப்பிடித்ததில் ஆறு மாத குழந்தை உட்பட 29 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 killed in fire in Manila Philippines


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->