தென் கொரியா || வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தென் கொரியாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் டேஜியோன் நகரத்தில் அமைந்துள்ள ஏழு மாடி வணிக வளாகத்தின் அடித்தளத்தின் கார் நிறுத்தப் பகுதியில் திடீரென தீப்பிடித்தது.

அடிதளத்தில் பற்றிய தீயானது கொழுந்துவிட்டு எரிந்து மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் வேகமாக பரவியதில் முதல் மூன்று தளங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 90க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு, நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வணிக வளாகத்தில் இருந்த 100 பேர் மற்றும் அருகாமையில் உள்ள கட்டிடங்களில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தின் அடிதளத்தில் வேலை செய்து கொண்டிருந்த 7 பணியாளர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 died in fire accident in mall in south korea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->