ஆயுதமேந்திய கும்பல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு - 50 பேர் பலி - Seithipunal
Seithipunal


வட-மத்திய நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதி விவசாய சமூகங்கள் மற்றும் நாடோடி கால்நடை மேய்ப்பர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நிலம் தொடர்பாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வடமத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள உமோகிடி கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர் என்றும், ஒரு நாள் முன்பு அதே இடத்தில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அரசாங்க தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில், வடக்கு-மத்திய நைஜீரியாவில் நிலத் தகராறுகள் தொடர்பாக விவசாயிகளுடன் கடந்த காலங்களில் மோதிய உள்ளூர் கால்நடை மேய்ப்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

50 killed in Armed gang shooting attack in Nigeria


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->