#தாய்லாந்து | வீட்டிற்குள் நுழைந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


தாய்லாந்தில் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து தென்மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட்சபுரி பகுதியில் உள்ள வீட்டிற்குள் திடீரென ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். பின்பு அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். இந்நிலையில் மர்ம நபர் போலீசார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஒரு க்ளோக் பிஸ்டல் மற்றும் இரண்டு மெகசின்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 people were killed when a mysterious person shooting in Thailand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->