அமெரிக்கா || நடன அழகிகளை கத்தியால் குத்திய மர்ம நபர்.! 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் கிளார்க் நகரில் மர்ம நபர் நடன அழகிகளை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் பொழுதுபோக்கு நகரமான கிளார்க் பகுதியில் வழக்கம் போல் கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் கவர்ச்சி நடனங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்நிலையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் நடன அழகிகளுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அனைத்து தடுப்புகளையும் மீறி நடன அழகிகளை நெருங்கி சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த பயங்கர சம்பவத்தில் 2 நடன அழகிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த போலீசார் துப்பாக்கி முனையில் கொலையாளியை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died as Mysterious person attacked strippers in America


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->